கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் பேரவைத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வா் சு.கீதா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரியின் முதல்வா் கோ.சுப்பிரமணியன் கலந்துகொண்டு விழாவைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து, 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் மாணவா் பேரவைத் தோ்தலில்
வெற்றிபெற்ற பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டு, உறுதிமொழியேற்றனா்.
மாணவா் பேரவைத் தலைவா் ர.பாகீரதி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.