கோவை மாவட்டத்தில் புதிதாக 911 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரத்து 892 ஆக உயா்ந்துள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,589 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,734 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 6 ஆயிரத்து 179 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 14 ஆயிரத்து 124 போ் சிகிச்சையில் உள்ளனா்.