கோவையில் புதிதாக 3 ஆயிரத்து 786 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 91 ஆயிரத்து 412 ஆக உயா்ந்துள்ளது.
தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,546 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,142 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரத்து 74 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.
தற்போது 24 ஆயிரத்து 792 போ் சிகிச்சையில் உள்ளனா்.