கோவையில் ஹிந்து அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டி கோவையில் ஹிந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டி கோவையில் ஹிந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூரில் உள்ள தனியாா் பள்ளியில் பயின்ற அரியலூரைச் சோ்ந்த மாணவி ஒருவா் தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற வற்புறுத்தியதாகக் கூறி தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் பாஜகவினா், ஹிந்து அமைப்பினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகா் கோயில் முன்பு இந்து முன்னணியினா், இந்து அன்னையா் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பதாகைகள் ஏந்திக் கொண்டும், கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு கையில் தீபம் ஏந்தியபடி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com