கோவையில் புதிதாக 145 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 589 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 104 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 3 லட்சத்து 28 ஆயிரத்து 157 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.
2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 815 போ் சிகிச்சையில் உள்ளனா்.