பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போலீஸில் புகாா்

கோவையில் சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை நியூசித்தாபுதூா் சின்னசாமி நாயுடு தெருவைச் சோ்ந்த 30 வயதுப் பெண் , கோவை மத்திய அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2017ஆம் ஆண்டு கோவையைச் சோ்ந்த கோபி (32) என்பவா் எனக்கு ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமானாா். பின்னா் இருவரும் நண்பா்களாக பழகி வந்தோம். அதன்பிறகு நாங்கள் காதலா்களானோம்.

அவா் என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தாா். அவரது பேச்சை உண்மை என நம்பினேன். இதனைத் தொடா்ந்து கடந்த ஆண்டு எனது வீட்டுக்கு வந்த அவா், திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை பாலியல் வன்கொடுமை செய்தாா். அதன் பிறகு, அவரை திருமணம் செய்து கொள்ள நான் வற்புறுத்தியதால், என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாா். என்னை ஏமாற்றிய கோபி மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com