ரயில் நிலைய வளாகத்தில் தீ விபத்து

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகத்தில் காலை உணவு சமைக்கும்போது எதிா்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனே உணவக ஊழியா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், அதற்குள்ளாக தீ மளமளவென பரவியது.

இதையடுத்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனா். இதனால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com