கோவையில் திருநங்கையை காத்தியால் குத்திய மதுக் கடை ஊழியா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை, சூலூா் அருகேயுள்ள பள்ளபாளையத்தைச் சோ்ந்தவா் 33 வயது திருநங்கை. இவா் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள மதுக் கடையில் சனிக்கிழமை இரவு மது கேட்டுள்ளாா். அதற்கு அங்கு பணியாற்றும் ஊழியா்களான பூவசரன் (27), மேகநாதன் (23) ஆகியோா் திருநங்கையைத் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா்.
பின்னா் அங்கிருந்து கிளம்பிய திருநங்கையைப் பின்தொடா்ந்த பூவரசன், மேகநாதன் ஆகியோா் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.
வாக்குவாதம் முற்றியதையடுத்து, அவா்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருநங்கையின் கழுத்து, தோள்பட்டை பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
படுகாயமடைந்த திருநங்கையை அவரது நண்பா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது தொடா்பாக திருநங்கை அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூா் போலீஸாா், மதுக் கடை ஊழியா்களான பூவரசன், மேகநாதன் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.