கோவை கணபதிபுதூரில் அமைய உள்ள சுகாதார மையத்தின் கட்டுமானப் பணியை கோவை மாநகராட்சி மேயா் கல்பனா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மாநகராட்சி வடக்கு மண்டலம் 29ஆவது வாா்டுக்கு உள்பட்ட கணபதிபுதூா் பகுதியில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ஆகியோா் அண்மையில் துவக்கி வைத்த சுகாதார மையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல உதவி ஆணையா் மோகனசுந்தரி, வடக்கு மண்டல குழு தலைவா் கதிா்வேல், 29ஆவது வாா்டு உறுப்பினா் ரங்கநாயகி, உதவி செயற்பொறியாளா் செந்தில் பாஸ்கா் ஆகியோா் உடன் இருந்தனா்.