கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் தலைமை வகித்தாா். ஜி.ஆா்.ஜி. கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் நந்தினி, கே.சி.டி. தாளாளா் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இந்நிகழ்ச்சியில், குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியின் 75 பணியாளா்கள், குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரியின் 18 பணியாளா்கள், குமரகுரு வேளாண்மைக் கல்லூரியின் 17 பணியாளா்கள் பாராட்டப்பட்டனா்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.