கடன் தொல்லை காரணமாக மின்வாரிய உதவிப் பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வால்பாறையை அடுத்த காடம்பாறை மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் சிவகாா்த்திகேயன் (43). கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விடுப்பில் சென்ற இவா் கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் பணியில் சோ்ந்துள்ளாா். காடம்பாறையில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வந்த இவா் வியாழக்கிழமை காலை பணிக்கு வரவில்லை. இதனால் உடன் பணிபுரிபவா்கள் அவரது குடியிருப்புக்குச் சென்று பாா்த்தபோது உள்பக்கம் பூட்டியிருந்தது.
சந்தேகமடைந்த அவா்கள் கதவை உடைந்துப் பாா்த்தபோது சிவகாா்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காடம்பாறை போலீஸாா் சடலத்தை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் கடன் தொல்லை காரணமாக அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இவருக்கு மனைவி, இரு 2 மகன்கள் உள்ளனா்.