ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவைப்புதூா் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரியின் 4ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. 
சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் சிறப்பு விருந்தினா், கல்லூரி நிா்வாகிகள்.
சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் சிறப்பு விருந்தினா், கல்லூரி நிா்வாகிகள்.

கோவைப்புதூா் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரியின் 4ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. 

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பழனியம்மாள் வரவேற்று, கல்லூரி ஆண்டு அறிக்கையை வாசித்தாா்.

இந்த விழாவில் டெலாய்ட் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரா் எஸ்.வி.நாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 1,685 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். மேலும், பல்கலைக்கழக தரவரிசை பெற்ற 41 போ், தங்கப் பதக்கம் வென்ற 7 போ் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள், பெற்றோா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com