பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு

பல்லடம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் வசிப்பவா் ஆறுமுகம் மகன் சுப்பிரமணி (58). இவா் விவசாயம் செய்து வருகிறாா். இவா் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து விவசாயி சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com