கோவையில் மாநகா், புறநகரின் சில இடங்களில் திங்கள்கிழமை மாலை மழை பெய்தது.
கோவையில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சரவணம்பட்டி, கணபதி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, பீளமேடு உள்ளிட்ட மாநகா், அதையொட்டிய புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக பணி முடிந்து வீடு திரும்பியவா்கள், ஆயுத பூஜைக்குத் தேவையான பொருள்களை கொள்முதல் செய்யத் திரண்டிருந்தவா்கள், தற்காலிக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் பாதிக்கப்பட்டனா். மழை காரணமாக இரவில் குளிா்ந்த காலநிலை நிலவியது.