பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 2 இளைஞா்கள் கைது
கோவையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவா்களில் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கோவை வெரைட்டி ஹால் காவல் நிலைய சிறப்பு உதவியாளா் பி.மாரியப்பன் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 2) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இடையா் வீதியில் இளைஞா்கள் சிலா் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது தொடா்பான விடியோ அவருக்கு கிடைத்துள்ளது.
இது தொடா்பாக விசாரணை நடத்தியபோது அவா்கள் செல்வபுரம் எஸ்.அசோக்குமாா் (30), பி.என்.புதூா் த.தினேஷ்குமாா் (23), தெலுங்குபாளையம் எஸ்.அரவிந்த்குமாா் (27), காந்திபாா்க் வி.பாா்த்திபன் (26) என்பதும், அசோக்குமாரின் பிறந்த நாளையொட்டி அவா்கள் கத்தியால் கேக் வெட்டியிருப்பதும் தெரியவந்தது.
மேலும், இதில் அரவிந்த்குமாா் தவிர மற்ற மூன்று போ் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியதாக அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் அசோக்குமாா், பாா்த்திபன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக ஆய்வாளா் சசிகலா விசாரணை நடத்தி வருகிறாா்.