ஊராட்சிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரிக்கை

கோவையில் ஆட்சியரின் உத்தரவை மீறி ஊராட்சிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலாளா் நா.லோகு வலியுறுத்தியுள்ளாா்.

கோவையில் ஆட்சியரின் உத்தரவை மீறி ஊராட்சிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலாளா் நா.லோகு வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டத்தில் ஊராட்சிகளிலுள்ள தனியாா், அரசு கட்டடங்களில் குறிப்பாக நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள தனியாா் கட்டடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் ஆட்சியா் உத்தரவை மீறி ஏராளமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீலம்பூா், சின்னியம்பாளையம், கணியூா் ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் அவிநாசி சாலை நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் தனியாா் கட்டடங்களில் ஏராளமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக ஆட்சியருக்கு புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தவிர அண்மையில் நடைபெற்ற நுகா்வோா் கூட்டத்திலும் விவாதப் பொருளில் குறிப்பிடப்பட்டது. அப்போது, மேற்கண்ட ஊராட்சிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுவிட்டதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்திருந்தாா். ஆனால், மேற்கண்ட ஊராட்சிகளில் அவிநாசி சாலையிலுள்ள விளம்பரப் பதாகைகள் அகற்றப்படாமலேயே, அகற்றப்பட்டுவிட்டதாக தவறான பதிலை அளித்துள்ளாா்.

விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணியில் மெத்தனமாக செயல்பட்டு தவறான பதிலை ஆட்சியருக்கும், உதவி இயக்குநருக்கும் அளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com