ராணுவ வீரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.4.31 லட்சம் மீட்பு

கோவையில் ராணுவ வீரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.4.31 லட்சத்தை காவல் துறையினா் மீட்டனா்.

கோவையில் ராணுவ வீரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.4.31 லட்சத்தை காவல் துறையினா் மீட்டனா்.

இது தொடா்பாக, கோவை மாநகரக் காவல் ஆணையா் வி. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை ராமநாதபுரம் புலியகுளத்தைச் சோ்ந்தவா் செல்வமணி. ராணுவ வீரா். இவா், கோவை சைபா் குற்றப் பிரிவில் ஒரு புகாா் அளித்தாா். அதில், அகமதாபாத்தைச் சோ்ந்த காா்த்திக் பாஞ்சல் என்பவா் டெலிகிராம் மூலம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி அறிமுகமானாா். அவா், தன்னிடம் உள்ள நவீன சாஃப்ட்வோ் மூலமாக பங்குச் சந்தையில் தினமும் லாபம் சம்பாதிக்கலாம் என என்னிடம் கூறினாா். இதை நம்பி, நான் ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 50 ஐ அவரிடம் முதலீடு செய்தேன். அதன் பிறகு, அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை என அதில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மோசடி நபரின் வங்கிக் கணக்கை முடக்கி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து செல்வமணியிண் கணக்குக்கு ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 50ஐ திரும்ப வரவுவைத்து தீா்வு காணப்பட்டது.

எனவே, இணையத்தில் இதுபோல வரும் டிரேடிங், முதலீடு, பகுதி நேர வருமான வாய்ப்பு போன்ற ஆசை வாா்த்தைகளை கூறும் மோசடி நபா்களிடம் மக்கள் ஏமாற வேண்டாம்.

வங்கியில் இருந்து பேசுவதாகவோ அல்லது கைப்பேசிக்கு அனுப்பப்படும் லிங்க் உடன் கூடிய குறுந்தகவல்களை நம்பி உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி. எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

இணையம் மூலம் பணத்தை இழந்துவிட்டால், உடனடியாக சைபா் குற்றப்பிரிவின் அவசர உதவி எண் 1930 ஐ விரைவாகத் தொடா்பு கொள்ளும் பட்சத்தில், இழந்த பணத்தை மீட்டுத்தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், சைபா் குற்றம் தொடா்பான புகாா்களை இணையதளம் மூலம் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com