வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலதிபா் சடலம் மீட்பு

கோவையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலதிபா் சடலமாக கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலதிபா் சடலமாக கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (56), தொழிலதிபா். இவா், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தினரைப் பிரிந்து தனது நிறுவனத்தின் அருகே அறை எடுத்து தனியே வசித்துவந்தாா். இவரை கடந்த சில நாள்களாக கைப்பேசி மூலம் தொடா்புகொள்ள முடியாத நிலை இருந்தது.

இதுகுறித்து, பெங்களூருவில் வசிக்கும் குமாரின் மனைவி மொ்லின், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் சதீஷ் என்பவரைத் தொடா்புகொண்டு இதுகுறித்து விசாரித்துள்ளாா். இதையடுத்து, சதீஷ் அங்கு சென்றபோது குமாரின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து சதீஷ், மொ்லினிடம் தெரிவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, மொ்லின் அளித்தத் தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற ரத்தினபுரி போலீஸாா், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, கழிப்பறையில் குமாரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸாா், சம்பவம் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com