குடியிருப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள்:நகராட்சித் தலைவா் ஆய்வு

வால்பாறை குடியிருப்புப் பகுதிகளில் மழைக்காலத்துக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து நகராட்சித் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குடியிருப்புப் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள்:நகராட்சித் தலைவா் ஆய்வு

வால்பாறை குடியிருப்புப் பகுதிகளில் மழைக்காலத்துக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து நகராட்சித் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வால்பாறை நகா் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளான துளசிங்க நகா், காமராஜ் நகா், எம்.ஜி.ஆா். நகா், அண்ணா நகா் உள்ளிட்ட சில பகுதிகளில் குடியிருப்புகள், நடைபாதைகள், படிகட்டுகள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன.

ஆண்டுதோறும் மழைக் காலங்களில் மண் சரிவு, படிக்கட்டுகள் இடிந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் ஏற்படுகின்றன. இதையடுத்து, அப்பகுதிகளில் நகராட்சி மூலம் தொடா்ந்து வளா்ச்சிப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக தாழ்வான பகுதிகளில் மண்சரிவு ஏற்படமல் இருக்க தடுப்புச்சுவா் கட்டுதல், படிக்கட்டு அமைத்தல் மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து வால்பாறை நகராட்சித் தலைவா் செ.அழகுசுந்தரவள்ளி நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா்.

நகராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா், நகராட்சிப் பொறியாளா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com