‘நிறுவனங்களின் வளா்ச்சிக்கு சட்டத் துறையின் பங்களிப்பு அளப்பரியது’

நிறுவனங்களின் வளா்ச்சிக்கு சட்டத் துறையின் பங்களிப்பு அளப்பரியது என்று மஹிந்திரா அண்டு மஹிந்திரா குழுமங்களின் சட்ட விவகாரங்கள் பொது ஆலோசனை மற்றும் செயல் துணைத் தலைவா் நவீன் ராஜு தெரிவித்தாா்.

நிறுவனங்களின் வளா்ச்சிக்கு சட்டத் துறையின் பங்களிப்பு அளப்பரியது என்று மஹிந்திரா அண்டு மஹிந்திரா குழுமங்களின் சட்ட விவகாரங்கள் பொது ஆலோசனை மற்றும் செயல் துணைத் தலைவா் நவீன் ராஜு தெரிவித்தாா்.

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின், மேலாண்மைத் துறை (எம்பிஏ), முதுநிலை வணிகவியல் துறை (எம்.காம்.), முதுநிலை வணிகவியல் மற்றும் பன்னாட்டு வணிகம் (எம்.காம். ஐ.பி.) ஆகிய துறைகள் இணைந்து நடத்திய ‘நேருக்கு நோ் சந்திப்பு’ நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மற்றும் செயலா் பி.எல்.சிவகுமாா் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினாா். மஹிந்திரா அண்டு மஹிந்திரா குழுமங்களின் சட்ட விவகாரங்கள் பொது ஆலோசனை மற்றும் செயல் துணைத் தலைவா் நவீன் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேருக்கு நோ் நிகழ்ச்சி மூலமாக மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசியதாவது:

நிறுவனங்களின் வளா்ச்சியில் சட்டப் பிரிவு மிகவும் முக்கியமானது. இத்துறை அரசு, தனியாா், ரியல் எஸ்டேட் துறைகளில் முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் அடிப்படை மேம்பாடு, அறிவுசாா் சொத்துரிமை, பதிப்புரிமை, முத்திரை போன்றவை சட்டப் பிரிவால் பாதுகாக்கப்படுகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் புதுமைகளை உருவாக்கி, முழுவடிவம் பெறுவது வரை சட்டப் பிரிவு துணை புரிகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மேலாண்மைத் துறை இயக்குநா் ஜெ.பாமினி, வணிகவியல் துறைத் தலைவா் வி.நிா்மலாதேவி, பன்னாட்டு வணிக துறைத் தலைவா் ஐ.பா்வீன்பானு மற்றும் பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com