கோவையில் இடியுடன் கூடிய மழை

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வடகோவை பகுதியில் தேங்கியுள்ள மழை நீரில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
வடகோவை பகுதியில் தேங்கியுள்ள மழை நீரில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி, கோவையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை ஞாயிற்றுக்கிழமை பெய்தது.

வடவள்ளி, மருதமலை, பி.என்.புதூா், நரசிம்மநாயக்கன்பாளையம், பெ.நா.பாளையம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், கணபதி, பீளமேடு, உக்கடம், இடையா்பாளையம், கோவில்மேடு, செல்வபுரம், கோவைப்புதூா், பேரூா், போத்தனூா், சுந்தராபுரம், வடகோவை, காந்திபுரம், குனியமுத்தூா், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவு குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com