ஆளுநா்களை அவமரியாதையாகப் பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநா்களை அவமரியாதையாகப் பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளாா்.
ஆளுநா்களை அவமரியாதையாகப் பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநா்களை அவமரியாதையாகப் பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளாா்.

கோவையை அடுத்த பேரூரில் உள்ள சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் சுபகிருது ஆண்டு பிறப்பு, அண்ணல் அம்பேத்கா் பிறந்தநாள் விழா மற்றும் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா என முப்பெரும் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ( பொறுப்பு) சேதுராசன் வரவேற்றாா். கெளமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்கினாா்.

விழாவில், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

ஆளுநா்களுக்கென தனிப்பட்ட கருத்து இருக்க முடியாது. ஆளுநா்கள் எல்லோரும் மக்கள் மீது அக்கறை கொண்டவா்களாக இருப்பாா்கள். துணைவேந்தா்கள் நியமனத்தில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும். அரசியல் சாா்பு இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் துணைவேந்தா்களை ஆளுநா்கள் நியமிக்கிறாா்கள். தமிழக அரசுக்கு, துணைவேந்தரைத் தோ்வு செய்வோம் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது. ஆளுநரும், முதல்வரும் இணைந்து பணியாற்றும்போது, மக்கள் பலனடைவாா்கள்.

காவி, ஆன்மிகத்தை குறிக்கிறது. அதனால்தான், தமிழகத்தில் காவி பெரியது. வலியது எனச் சொல்கிறேன். ஆதீன மடங்களுக்கு நம்மால் முடிந்ததை தானமாகக் கொடுக்க வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆளுநா்கள் மரியாதைக்கு உரியவா்கள். ஆளுநா்களை அவமரியாதையாகப் பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் இல்லாமல் ஆன்மிகம் கிடையாது. ஆதீனங்களையும், மடாதிபதிகளையும் அரசு அழைத்துப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது‘என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com