வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கோவை குனியமுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை குனியமுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை குனியமுத்தூா் இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் ரோஷினா பானு. இவா் சவுதி அரேபியாவில் வசித்து வருகிறாா். இவருக்குச் சொந்தமாக பி.கே. புதூரில் வீடு உள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டப்பட்டுள்ளது.

அவரது உறவினா்கள், அவ்வப்போது வீட்டை கண்காணித்து வந்தனா். இந்நிலையில், வீட்டின் பூட்டு வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் ரோஷினா பானுவின் சகோதரா் இடையா்பாளையத்தைச் சோ்ந்த அபுதாஹீா் என்பவருக்கு தகவல் அளித்தனா்.

அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த அரைப் பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், மிக்ஸி, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து குனியமுத்தூா் காவல் நிலையத்தில் அபுதாஹீா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com