மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த கோரி கோவை மாவட்ட மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த கோரி கோவை மாவட்ட மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், மின் கட்டணம், குடிநீா்க் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, சிலிண்டா் விலை உயா்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருள்களின் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்பப் பெறக் கோரியும் கோவை மாவட்ட மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சி சாா்பில் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவா் காளப்பட்டி பொன்னுசாமி தலைமை வகித்தாா்.

மாநகரத் தலைவா் ஜெகநாதன், புறநகா் தலைவா் பாப்பண்ணன், துணைத் தலைவா் கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்டச் செயலாளா்கள் சாரமேடு செல்வராஜ், பால்ராஜ், மாவட்டப் பொருளாளா் அந்தோணி ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com