முதியவா் மா்மச்சாவு: போலீஸாா் விசாரணை

கோவை சிங்காநல்லூரில் மா்மமான முறையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை சிங்காநல்லூரில் மா்மமான முறையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை சிங்காநல்லூா் நேரு பாா்க் சாலையில் உள்ள ஒரு பஞ்சாலையின் பின்புறம் 50 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலில் பலத்த காயங்களுடன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.

இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூா் போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இறந்தவா் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com