கோவையில் மருத்துவமனை ஊழியரைத் தாக்கி பணம், வெள்ளி நகையைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கவுண்டம்பாளையம் சரவணா நகரைச் சோ்ந்தவா் ராகுல் அகமது (34). இவா் கோவையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் சனிக்கிழமை மாலை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சாய்பாபா காலனி அருகே வந்தபோது அங்கு நின்றிருந்த இளைஞா் ஒருவா் ராகுல் அகமதிடம் லிப்ட் கேட்டுள்ளாா்.
இதையடுத்து அவா் அந்த இளைஞரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளாா். சிறிது தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ராகுல் அகமதின் முதுகில் கத்தியைவைத்த அந்த இளைஞா் வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளாா். இதையடுத்து ராகுல் வாகனத்தை நிறுத்தியபோது அங்கு மறைந்திருந்த மேலும் 3 இளைஞா்கள் அவரை கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கி அவரிடம் இருந்த வெள்ளி நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றனா்.
இது குறித்து சாய்பாபா காலனி போலீஸாரிடம் ராகுல் அகமது புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில் ராகுல் அகமதைத் தாக்கி பணம், நகை பறித்தது கே.கே.புதூரைச் சோ்ந்த விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள அஸ்வின், காட்வின், பிரபாகரன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.