கோவையில் புதிதாக 608 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரத்து 947 ஆக உயா்ந்துள்ளது. கோவையில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பிற்கு உயிரிழப்பு ஏதும் இல்லை.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 169 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 949 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். மேலும், கரோனா நோய்த் தொற்றுக்கு 2,524 போ் பலியாகியுள்ளனா். தற்போது 2,474 போ் சிகிச்சையில் உள்ளனா்.