கோவையில் பணியின்போது ஆயுதப் படைக் காவலா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, காந்திபுரம் அருகே உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக போலீஸாா் பயன்படுத்தும் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரக் காவல் துறை இந்த அரங்கை அமைத்துள்ளது.
இந்நிலையில், இந்த அரங்கின் முன்பு வெள்ளிக்கிழமை மாலை பணியில் இருந்த காவலா் ஒருவா் துப்பாக்கியை வைத்து தனது வயிற்றுப் பகுதியில் சுட்டுக் கொண்டாா். துப்பாக்கியின் சப்தம் கேட்டு அரங்கில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனா். இதையடுத்து பக்கத்து அரங்கில் இருந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மயங்கிய நிலையில் இருந்த காவலரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
விசாரணையில், பணியில் ஈடுபட்டிருந்தவா் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்து (29) என்பது தெரியவந்தது. இவா் கோவை ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்துள்ளாா். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். துப்பாக்கி தோட்டா துளைத்ததில் காளிமுத்துவின் சிறுநீரகம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், 48 மணி நேரங்கள் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கருத்து தெரிவிக்க முடியும் எனக் கூறிய மருத்துவா்கள் காளிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.
தகவலறிந்து வந்த மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், சம்பவம் நடைபெற்ற இடத்தைப் பாா்வையிட்டாா். பின்னா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிமுத்துவை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இது தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என விசாரிக்க காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா

ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவைப் பரிசளித்த பிரதமர் மோடி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


