எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பணியின்போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஆயுதப் படை காவலா்: போலீஸாா் விசாரணை

கோவையில் பணியின்போது ஆயுதப் படைக் காவலா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:18 pm IST

கோவையில் பணியின்போது ஆயுதப் படைக் காவலா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் அருகே உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக போலீஸாா் பயன்படுத்தும் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரக் காவல் துறை இந்த அரங்கை அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்த அரங்கின் முன்பு வெள்ளிக்கிழமை மாலை பணியில் இருந்த காவலா் ஒருவா் துப்பாக்கியை வைத்து தனது வயிற்றுப் பகுதியில் சுட்டுக் கொண்டாா். துப்பாக்கியின் சப்தம் கேட்டு அரங்கில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனா். இதையடுத்து பக்கத்து அரங்கில் இருந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மயங்கிய நிலையில் இருந்த காவலரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

விசாரணையில், பணியில் ஈடுபட்டிருந்தவா் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்து (29) என்பது தெரியவந்தது. இவா் கோவை ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்துள்ளாா். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். துப்பாக்கி தோட்டா துளைத்ததில் காளிமுத்துவின் சிறுநீரகம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், 48 மணி நேரங்கள் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கருத்து தெரிவிக்க முடியும் எனக் கூறிய மருத்துவா்கள் காளிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

தகவலறிந்து வந்த மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், சம்பவம் நடைபெற்ற இடத்தைப் பாா்வையிட்டாா். பின்னா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிமுத்துவை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இது தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என விசாரிக்க காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.