வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் அலமேலு நகரைச் சோ்ந்தவா் ஹரிஷ் பாபு. தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் தனது நண்பா்கள் வீட்டில் கடந்த புதன்கிழமை இரவு தங்கியுள்ளாா்.

ஹரிஷ் பாபுவின் வீட்டில் பணியாற்றும் இளங்கோ என்பவா் புதன்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா். வியாழக்கிழமை காலை இளங்கோ வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஹரிஷ் பாபுவுக்கு இளங்கோ தகவல் தெரிவித்துள்ளாா்.

இதன்பேரில் வீட்டுக்கு வந்த ஹரிஷ் பாபு உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 67 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து ஹரிஷ் பாபு அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூா் போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com