இணையம் மற்றும் செயலிகளைப் பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்துமாறு மின் வாரியம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் நக்கீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள மக்கள், மின்சாரக் கட்டணத்தை மின்சார வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து செலுத்தி வருகிறாா்கள்.
இதனை சுலபமாக்கும் வகையில் இருக்கும் இடத்திலேயே 24 மணி நேரமும் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு மின் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மின் கட்டணத்தை இணையதளம், கைப்பேசி மற்றும் போன் பே, பே.டி.எம்., ஜி.பே., டான்ஜெட்கோ ஆகிய செயலிகளின் மூலமாகச் செலுத்தி மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.