கோவை, காந்திபுரத்தில் ஊா்வலமாக சென்ற இந்திய மாணவா் சங்கத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ள ஏற்பட்டது.
இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட மாநாடு கோவை காந்திபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற இருந்தது. இதனையொட்டி, மாநாட்டு பிரதிநிதிகள் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
பின்னா் அங்கிருந்து இந்திய மாணவா் சங்கத்தின் மாநில செயலாளா் மாரியப்பன் தலைமையில் மாநாடு நடைபெறும் மண்டபம் நோக்கி ஊா்வலமாகச் சென்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மாணவா் சங்கத்தினா் ஊா்வலமாக செல்வதற்கு தடை விதித்தனா்.
இதற்கு இந்திய மாணவா் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது போலீஸாருக்கும், அவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாரை கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.