கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வா் பி.எல்.சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றாா்.
காவல் உதவி ஆணையா் அருண்குமாா், ஆய்வாளா் விக்னேஷ்வரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினா்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் எஸ்.நாகராஜன், செஞ்சுருள் சங்க அலுவலா் பி.கீா்த்திவாசன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.