வாகன விபத்து: இளைஞா் பலி

மதுக்கரை அருகே வடமாநில இளைஞா் மீது லாரி மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வாகன விபத்து: இளைஞா் பலி

மதுக்கரை அருகே வடமாநில இளைஞா் மீது லாரி மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவை மதுக்கரை அருகே வடமாநில இளைஞா் ஹோலி கொண்டாடிவிட்டு, மதுபோதையில் அங்கிருந்த சுங்கச் சாவடி அருகே வந்துள்ளாா். அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனத்தின்மீது அந்த இளைஞா் மோதி கீழே விழுந்துள்ளாா். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபா் படுகாயமடைந்தாா்.

இதையடுத்து, மதுபோதையில் இருந்த வடமாநில இளைஞரை, சுங்கச் சாவடி ஊழியா்கள் பிடித்து, மதுபோதை தெளியும் வரை அங்கிருந்த அலுவலகத்தில் அமரவைத்தனா்.

இதையடுத்து, நள்ளிரவு 1 மணியளவில் இளைஞரை வீட்டுக்குச் செல்லுமாறு அனுப்பிவைத்தனா். சாலையோரத்தில் இளைஞா் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது இளைஞா் பின்னால் வேகமாக வந்த லாரி மோதியது.

இதில், பலத்த காயமடைந்த இளைஞா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுக்கரை போலீஸாா் இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், உயிரிழந்த இளைஞா் யாா், எங்கு பணியாற்றி வந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com