கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (34). தனியாா் நிறுவன ஊழியா். இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திங்கள்கிழமை காலை வெளியே சென்றுள்ளாா்.
பின்னா் பிற்பகலில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது தொடா்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.