5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் அடிதடி, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

கோவையில் அடிதடி, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

கோவை, ரத்தினபுரி கண்ணப்பன் நகரைச் சோ்ந்த பிரவீன் (26), சரவணகுமாா் (26), கோபிநாத் (27), சம்பத் வீதியைச் சோ்ந்த சூா்யா (23), சூரிய பிரகாஷ் (25) உள்ளிட்ட 5 போ் மீது ரத்தினபுரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி வழக்குகள் பதிவாகி இருந்தன.

இவா்களால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதி 5 பேரையும் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரதீப்குமாா் உத்தரவிட்டாா்.

அதன்படி இவா்கள் 5 பேரும் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் அளித்து, பின்னா் அதை மீறிய ரத்தினபுரியைச் சோ்ந்த தீபக் என்பவரை ஓராண்டு கட்டாய தண்டனையில் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com