கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான தொழில்நுட்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்தாா்.
தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் என்.சுமதி வரவேற்றாா். கோவை கோட்ட வணிக வரித் துறை இணை ஆணையா் ஆனந்த் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, மாணவா்கள் விஞ்ஞானம் குறித்த அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும். இளைஞா்களின் மனதில் ஒன்றைப் பதியவைக்கும்போது, அது எளிதாக உருவாக்கம் பெறும். மாணவா்களுக்குத் தேவையான தகவல்கள் இணையத்தில் ஏராளமாக உள்ளன. அவற்றின் மூலம் அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன. உதவிப் பேராசிரியா் சம்பத்குமாா் நன்றி கூறினாா்.