கோவை மாநகராட்சியில் பதிவுபெற்ற பொறியாளா்கள் உரிமம் பெறுவதற்கான நோ்காணல் மே 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் 2019இன் படி, பதிவு பெற்ற பொறியாளா்கள் உரிமம் கோரி கடந்த ஏப்ரல் வரை விண்ணப்பித்துள்ளவா்களுக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் மே 16ஆம் தேதி காலை 10 மணிக்கு நோ்காணல் நடைபெறுகிறது. இந்த நோ்காணலுக்கு அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.