சாலை விபத்து;தொழிலாளி பலி

துடியலூா் அருகே சாலையின் குறுக்கே காட்டுப் பன்றி வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

பெ.நா.பாளையம்: துடியலூா் அருகே சாலையின் குறுக்கே காட்டுப் பன்றி வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

கோவை தடாகம் சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (44). இவா் வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வீடு திரும்பியுள்ளாா்.

திருவள்ளுவா் நகரை அடுத்த நா்சரி பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென காட்டுப் பன்றி வந்துள்ளது. இதனால், நிலைத் தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறை மற்றும் தடாகம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் நாகராஜின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இப்பகுதியில் காட்டுப் பன்றி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இதேபோல விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com