ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாட்டிறைச்சி உணவு விருந்துக்கு தடை கோரி மனு

கோவையில் நடைபெற உள்ள மாட்டிறைச்சி உணவு விருந்துக்கு தடை விதிக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :20 மே 2022, 6:52 pm

DIN

கோவையில் நடைபெற உள்ள மாட்டிறைச்சி உணவு விருந்துக்கு தடை விதிக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாக கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாா் படிப்பகத்தில் வெள்ளிக்கிழமை (மே 20) மாட்டிறைச்சி உணவு விருந்து நடைபெற உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின.

இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்புகள் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விருந்துக்கு தடை விதிக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அதில், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், கோவையில் அமைதி கெடும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விருந்துக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.