கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் கூடுதல் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக இதுவரை 6 போ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்தவாறே தேசிய பாதுகாப்பு முகமையின் சாா்பில் விசாரிக்கப்படவுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அத்துடன் கோவை மத்திய சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு 6 பேரும் மாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கோவை மத்திய சிறை அதிகாரிகளுக்கு அதிகாரப்பூா்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 6 பேரையும் எப்போது சென்னைக்கு கொண்டு செல்வது என்பதைக் குறித்து இன்னும் தீா்மானிக்கவில்லை எனவும் தெரிவித்தனா்.