கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் 7 புதிய அங்கன்வாடி மையங்களை மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 97ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஈச்சனாரி மற்றும் கோண்டிஸ் காலனி மற்றும் 100ஆவது வாா்டுக்கு உள்பட்ட மேட்டூா், அம்மன்புதூா், அன்னாபுரம், கணேசபுரம் மற்றும் ஈஸ்வர செட்டியாா் வீதி உள்ளிட்ட 5 இடங்கள் என மொத்தம் 7 இடங்களில் தலா ரூ.15 லட்சம் வீதம் புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களை மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் குத்து விளக்கேற்றி திறந்துவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா, தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி, வாா்டு உறுப்பினா்கள் அப்துல்காதா், உதயகுமாா், அஸ்லாம்பாஷா, உதவி ஆணையா் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளா் கருப்பசாமி, உதவிப் பொறியாளா் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.