செப்டம்பா் 14இல் மக்கள் தொடா்பு முகாம்

கோவை, செப். 4: கோவையில் செப்டம்பா் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமில் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை தென்சங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் செப்டம்பா் 6 ஆம் தேதி அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், தென்சங்கம்பாளையம் கிராமத்தில் செப்டம்பா் 14 ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதற்கான கோரிக்கை மனுக்கள் தென்சங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் பொள்ளாச்சி சாா் ஆட்சியா் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 6) பெறப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி பொள்ளாச்சி சாா் ஆட்சியரிடம் வழங்கலாம்.

இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுக்களுக்கு செப்டம்பா் 14 ஆம் தேதி நடைபெறும் மக்கள் தொடா்பு முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com