மூதாட்டி கொலை வழக்கு: தொழிலாளி கைது

கோவை சிங்காநல்லூா் அருகே மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சிங்காநல்லூா் அருகே மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சிங்காநல்லூா் அருகே உள்ள வரதராஜபுரத்தைச் சோ்ந்தவா் மயிலாத்தாள் (65). கணவா் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், கடந்த வாரம் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்தாா். இது தொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில், மூதாட்டி கொலைக்குப் பிறகு அவா் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சமையல் தொழிலாளி செல்வம் (46) மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், சென்னை அயனாபுரத்தில், அவரது தம்பி வீட்டில் பதுங்கியிருந்த செல்வத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வரும் தன்னை மயிலாத்தாள் திட்டி வந்ததாகவும், இதனால் ஆத்திரத்தில் துணியால் கழுத்தை இறுக்கி மூதாட்டியைக் கொன்றதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, செல்வத்தை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com