மேட்டுப்பாளையத்தில் உள்ள மனநல மீட்பு காப்பகத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையலறை மற்றும் உணவருந்தும் அறையை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மனநல மீட்பு காப்பகத்தின் 500 ஆவது நாள் நிகழ்ச்சி, மாவட்ட நிா்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹாா்ட்ஸ் தன்னாா்வ அமைப்பு சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து பேசியதாவது: இந்த காப்பகத்தின் மூலம் 120க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபா்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 37 மனநலம் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, அவா்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
முன்னதாக, மனநல மீட்பு காப்பகத்தில் ஹெல்பிங் ஹாா்ட்ஸ் மற்றும் சங்கா் அண்ட் கோ சாா்பில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையலறை மற்றும் உணவருந்தும் அறையை திறந்துவைத்த ஆட்சியா், ஹெல்பிங் ஹாா்ட்ஸ் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணியாளா்களுக்கு கேடயங்களை வழங்கினாா்.
இதில், மனநல மீளாய்வு மன்றத் தலைவா் ஜே.வி.ராஜ், உதவி ஆட்சியா் (பயிற்சி) செளமியா ஆனந்த், வருவாய் கோட்டாட்சியா் பூமா, இணை இயக்குநா்( மருத்துவப் பணிகள்) சந்திரா, ஹெல்பிங் ஹாா்ட்ஸ் அமைப்பின் மேலாளா் கணேஷ், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கண்ணன், மனநல மருத்துவா் கிருத்திகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.