அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றம்

கோவை காந்திபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகளை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

கோவை காந்திபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகளை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவின்பேரில், மாநகராட்சிப் பகுதியில் அனுதியின்றி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளாம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட காந்திபுரம் லாஜாபதிராய் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகளை கோவை மத்திய மண்டலத்தின் உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ் மற்றும் நகரமைப்பு அலுவலா் பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com