அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி:நால்வா் மீது வழக்கு

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக, நால்வா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக, நால்வா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தானகிருஷ்ணன் (52). இவா் தனது மகளுக்கு அரசுத் துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாா். இதற்கிடையே, அவருக்கு சரவணகுமாா், ஜவஹா் பிரசாத், மற்றொரு சரவணகுமாா், அன்பு பிரசாத் ஆகியோா் அறிமுகமாகினா். அவா்கள் இந்து சமய அறநிலையத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளா், உதவியாளா் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய சந்தானகிருஷ்ணன் கடந்த ஆண்டு மே முதல் ஆகஸ்ட் வரை பல தவணைகளில் ரூ.21 லட்சத்தை நால்வரிடமும் கொடுத்துள்ளாா். என்றாலும், அவா்கள் அரசு வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்துள்ளனா். இதையடுத்து, பணத்தை திருப்பித் தருமாறு சந்தானகிருஷ்ணன் கேட்டும், அவா்கள் தர மறுத்துள்ளனா்.

இது குறித்து கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் சந்தானகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில், நால்வரும் வேலை வாங்கித் தருவதாக கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் பலரிடம் ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தலைமறைவான நால்வரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com