வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

கோவை காந்தி மாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை காந்தி மாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை கணபதி அருகேயுள்ள காந்தி மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (52), இவரது மனைவி ரஞ்சனா (46), இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா்.

தைப்பூசத்தையொட்டி, நால்வரும் வீட்டைப் பூட்டி விட்டு மருதமலை முருகன் கோயிலுக்கு சனிக்கிழமை பாத யாத்திரை சென்றுள்ளனா்.

இந்நிலையில், அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் மக்கள் பாா்த்தபோது, மகேந்திரனின் வீடு ஞாயிற்றுக்கிழமை திறந்துகிடந்துள்ளது. இதையடுத்து, அவா்கள் மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அவா் வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் மகேந்திரன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com