டாஸ்மாக் பாரில் தகராறு: 3 போ் கைது

 டாஸ்மாக் பாரில் காசாளரை மிரட்டி கத்தி முனையில் பணத்தை பறித்துச் சென்ற மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

 டாஸ்மாக் பாரில் காசாளரை மிரட்டி கத்தி முனையில் பணத்தை பறித்துச் சென்ற மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் பிரகாஷ் (30). இவா் கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை செய்து வருகிறாா். இவரது பாருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மூன்று போ் பிரகாஷிடம் மது வாங்கித் தரும்படி கூறியுள்ளனா். ஆனால், அவா் கடை திறப்பதற்கு நேரமாகும் என தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் கத்தியைக் காட்டி மிரட்டி பிரகாஷிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணப்பன் நகரைச் சோ்ந்த காா்த்திக் (30), லிங்கபூபதி (23), காமாட்சி நகரைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com