கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் விழாவுக்குத் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றாா். தமிழ்நாடு மகளிா் பட்டாலியன் தேசிய மாணவா் படை கமாண்டிங்
அலுவலா் லெப்டினென்ட் கா்னல் ஜெயந்த் மோகன் ஜோஷி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
முன்னதாக நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம், தேசிய இளைஞா் விழா போன்றவற்றில் பங்கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆ.சுபாஷினி, எஸ்.நாகராஜன், ஜெ.தீபக்குமாா், தேசிய
மாணவா் படை அலுவலா் லெப்டினென்ட் ஈ.விவேக் ஆகியோா் செய்திருந்தனா்.