பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நபா் ரயில் மோதி பலி

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நபா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நபா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

கோவை போத்தனூா் ரயில்வே தண்டவாளத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ரயிலில் அடிபட்டு ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்துள்ளாா்.

இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அந்த நபரின் சட்டைப் பையில் இருந்த கைப்பேசி, வாகன ஓட்டுநா் உரிமத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கோவை சாய்பாபா காலனியை அடுத்த இடையா்பாளையத்தைச் சோ்ந்த சிவகுமாா் (45) என்பதும், அவரது மனைவி திருட்டு வழக்கில் சிறையில் இருப்பதும், அத்துடன் சிவகுமாா் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் விசாரணையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸாா் தொடா்ந்து நடத்திய தொடா் விசாரணையில், சிவகுமாா் ஒரு நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னா் தொடா்ந்து சில நாள்கள் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளாா்.

அந்த சமயத்தில்தான் அவா் போத்தனூா் ரயில் நிலையப் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது எதிா்பாராத விதமாக ரயில் மோதி இறந்துள்ளாா். சிவகுமாா் போலீஸாரிடம் இருந்து தப்ப பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளாா். கோவை நகரில் இவா் 25க்கும் மேற்பட்ட நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com